Friday, October 21, 2011

மனநோயை குணமாக்கும் மருதாணிப் பூக்கள்

கன்னிப்பெண்கள் அழகிற்காக மருதாணியை அரைத்து கைகளில் வைத்துக்கொள்வார்கள். தலைமுடி கருகரு வென வளரவும், தலைமுடி உதிராமல் இருக்கவும் ஹென்னா எனப்படும் மருதாணியை பூசிக் குளிப்பார்கள். மருதாணி இலை மட்டுமல்லாது மருதாணிப் பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

கூந்தல் வளர

கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.

மனநோய் போக்கும்

ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

நாள்பட்ட தோல் நோய்

மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும். கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

1 comment:

  1. நீர்முள்ளி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 150 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம் கருவேலம் பிசின் 50 கிராம் பாதாம் பிசின் 50 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete